Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில், அகிலபாரதிய சந்தியாசிகள் சங்கம் சார்பில் ரதயாத்திரை நடந்தது.
அகிலபாரதிய சந்தியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்ளை சார்பில், கடந்த 19 ஆம்தேதிமுதல் நவ.13 வரையில், 13 ஆம் ஆண்டாக குடகு முதல் பூம்புகார் வரையில் காவிரி நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ரதயாத்திரை நடந்து வருகின்றது.
மல்லசமுத்திரம் வந்தடைந்த இந்த ரதயாத்திரையில் பேருந்து நிலையம் அருகில் அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டது.
நதிகளை தூய்மையாக வைத்திக்க வேண்டும், நதிகளை வணங்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்தனர். இந்த யாத்திரைக்கு ராமாநந்தசுவாமிகள் தலைமை வகித்தார்.
நாகேந்திரசுவாமிகள் உள்பட 30 சந்தியாசிகள் கலந்துகொண்டனர். ஏராளமான பொதுமக்கள் வழிபட்டு சந்தியாசிகளிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.